கொரோனா வைரஸிற்கு எதிரா இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், இதுவரை 23 பேர் இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பல்வேறுபட்ட தொற்றா நோயில் அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
அதேபோல இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றைப் பெற்றிருந்த போது கொரோனா தொற்றுக்கு ஆளாகிய 177 பேர் இதுவரை பலியாகியிருப்பதாகவும் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.