Date:

தேவை ஏற்படின் நாடு முடக்கப்படும் – அரசு

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படாத நிலையில் தேவை ஏற்படின் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடனான முடக்கம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் நாட்டின் நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் வட்டார தகவல்கள் தெரிவித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் சில கட்டுப்பாடுகளை வலுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தபோதும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

அடித்தோடு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact...

பங்களாதேஷில் இன்று புதிய பிரதமர் பதவியேற்பு

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஆட்சி...