Date:

தேவை ஏற்படின் நாடு முடக்கப்படும் – அரசு

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படாத நிலையில் தேவை ஏற்படின் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடனான முடக்கம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் நாட்டின் நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் வட்டார தகவல்கள் தெரிவித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் சில கட்டுப்பாடுகளை வலுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தபோதும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

அடித்தோடு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் மாத்தளை...

நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற...

ஜிந்துப்பிட்டியில் ஐந்துபேர் மீது துப்பாக்கிச்சூடு

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக 100 மடிக்கணினிகள் வழங்கி வைத்து சாதனை படைக்கும் ஹாஷிம் ஓமர் பவுண்டேஷன்

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின்...