பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ரத்மலான அஞ்சு’வின் உதவியாளர்கள் 2 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று கல்கிசை – இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 30 கிராம் ஹெரோயினும், 104 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 4 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டியதாக கருதப்படும் 53,000 ரூபா பணமும், மூன்று கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.