Date:

வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – அனுரகுமார

நாட்டின் முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக நாடு பின்பற்றும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளின் முடிவுகளை நாடும் மக்களும் அனுபவித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் எதிர்காலம் இல்லை என்பதை அனைத்து துறைகளும் காட்டுகின்றன என்றும் கடன் காரணமாக பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த வெளிநாட்டு இருப்புக்கள் போதுமானதாக இல்லை, இதன் விளைவாக அரசாங்கம் அதிகபடியான பணத்தை அச்சிடத் தொடங்கியது என்றும் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உரிய பொருளாதார தந்திரோபாயம் இல்லை என்பதை அரசாங்கம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373