டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ் தரங்க வெற்றி

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்து இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம், டைமண்ட் லீக் இறுதிப் போட்டியொன்றில் வெற்றி பெற்ற முதல் மற்றும் ஒரே இலங்கை வீரர் என்ற வரலாற்றுப் பதிவை ருமேஷ் தரங்க தனதாக்கிக்கொண்டார்.

இலங்கை நேரப்படி இன்று (06) அதிகாலை நிறைவடைந்த இப்போட்டியில், அவர் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்தச் சாதனையை நிலாநாட்டினார்.

இப்போட்டியில் ருமேஷிற்கு கடும் சவாலாக விளங்கிய போலந்தின் டேவிட் வேக்னர் (Dawid Wegner) 87.47 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

மேலும், 83.99 மீற்றர் தூரம் எறிந்த ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் கெஷோர்ன் வோல்கோட் (Keshorn Walcott) மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

போலி Gov Pay இணையதளம் மூலம் நிதி மோசடி

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை இணைய வழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம்...

ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80வது ஆண்டு நிறைவு விழா இன்றாகும். இதனை முன்னிட்டான விசேட விழா, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில்...