கெஹலிய கைது; அகிலவுக்குப் பிணை

விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய வழக்கில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுல் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் இருவரும் கொழும்பு நீதவான் அஸங்க எஸ். போதரகமவினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு சந்தேகநபரும் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்படுமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலும், சந்தேகநபர்கள் இருவருக்கும் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்தது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளும் சந்தேகநபர்கள் தரப்புச் சட்டத்தரணிகளும் சமர்ப்பித்த வாதங்களைக் பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

PTA க்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய...

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில்!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 22 வது திருத்தம் மற்றும் நீதித்துறைச் சட்டத்திற்கான திருத்தம் என்பன நீதி அமைச்சர் ஹர்ஷன...