வெள்ளவத்தை மற்றும் பாமன்கடையில் 07 மணித்தியால நீர் வெட்டு

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை (07) அதிகாலை 5.00 மணி வரை 7 மணித்தியாலங்களுக்கு வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 

பெருங்கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ அபிவிருத்தி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமொன்றுக்கான அவசியமான அபிவிருத்தி பணிகளுக்காகவே இந்த நீர் துண்டிப்பு மேற்கொள்ளப்படுவதாக குறித்த சபை குறிப்பிட்டுள்ளது.

 

அதற்கமைய, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதி மக்கள் அவசியமான நீரை முற்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், காணப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

 

இந்த அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பாகவும் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது...

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர்...