உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் தொடர்பில், தம்மை கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்த ரிட் மனு மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது.
இந்தமனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவை செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


