மத்திய மாகாணத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையினால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை
பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு,பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் அபாயம் கருதி மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண பிரதம செயலாளரினால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


