சமூக ஊடகத்தில் முஹம்மது நபி தொடர்பில் தவறாக பதிவிட்ட அனோஜனுக்கு சவூதியில் 5 ஆண்டுகள் சிறை, 3 மில்லியன் அபராதம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர், சமூக ஊடகத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் (SAR) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்ற இளைஞரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அவர், இணையத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் பங்கேற்றபோது, இஸ்லாமிய மத நம்பிக்கைகள் மற்றும் நபிகள் நாயகம் குறித்து அவமதிக்கும் வகையில் பேஸ்புக் பதிவொன்றில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது...

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர்...