சமூக ஊடகத்தில் முஹம்மது நபி தொடர்பில் தவறாக பதிவிட்ட அனோஜனுக்கு சவூதியில் 5 ஆண்டுகள் சிறை, 3 மில்லியன் அபராதம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர், சமூக ஊடகத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் (SAR) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்ற இளைஞரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அவர், இணையத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் பங்கேற்றபோது, இஸ்லாமிய மத நம்பிக்கைகள் மற்றும் நபிகள் நாயகம் குறித்து அவமதிக்கும் வகையில் பேஸ்புக் பதிவொன்றில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார். தனது 82 ஆவது வயதில் நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது...

வவுனியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்

வவுனியா புரவசம்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர். புரவசம்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தகவல்...