நவகமுவ துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

நவகமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரத்தொட்ட பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கி பிரயோகம் நடத்தி சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த மனிதப் படுகொலையை மேற்கொள்வதற்காகக் குற்றவாளிகள் வந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் மற்றும் அக்குற்றத்தைச் செய்வதற்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய சந்தேகநபர் ஒருவரும் நேற்று (19) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கொட பகுதியிலும், நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுரமுல்ல பிரதேசத்திலுமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 29 வயதுடைய ரணால மற்றும் பள்ளம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது...

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர்...