பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவு – பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்

பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தன்னுடைய ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவு, இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு. பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள், பல தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இணையற்ற கருணையுடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வையும் அவர் தனது குரல்வளம் மூலம் வெளிப்படுத்தினார். அவரது இனிமையான பாடல்கள் வரும் காலங்களிலும் கேட்போரை மயக்க வைக்கும்.

துயரமான இந்தத் தருணத்தில், அவரது குடும்பத்தினர், எண்ணற்ற இரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த இசைச் சமூகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில் காணாமல் போன 28 நாடுகளைச் சேர்ந்த 466 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 142 இந்தியர்கள், 54...

பாகிஸ்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ...