நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கவலைக்கிடமாக இருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் இந்த மோதல் இன்று (5)ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்த ஏனைய 23 பேரும் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தேசிய கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில்...

பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார். தனது 82 ஆவது வயதில் நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது...