அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, சாதாரண சேவைகளுக்கான குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதிகபட்ச பேருந்து கட்டணம் 2,422 ரூபாவில் இருந்து 2,902 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது.

அதேபோல், அரை சொகுசு (Semi-Luxury)பேருந்து சேவைகளின் கீழ் குறைந்தபட்ச கட்டணமாக காணப்பட்ட 44 ரூபா பேருந்து கட்டணம் 51 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் அதிகபட்ச கட்டணமான 3,330 ரூபா பேருந்து கட்டணம் 4,353 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தேசிய கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில்...

பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார். தனது 82 ஆவது வயதில் நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது...