அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, சாதாரண சேவைகளுக்கான குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதிகபட்ச பேருந்து கட்டணம் 2,422 ரூபாவில் இருந்து 2,902 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது.

அதேபோல், அரை சொகுசு (Semi-Luxury)பேருந்து சேவைகளின் கீழ் குறைந்தபட்ச கட்டணமாக காணப்பட்ட 44 ரூபா பேருந்து கட்டணம் 51 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் அதிகபட்ச கட்டணமான 3,330 ரூபா பேருந்து கட்டணம் 4,353 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது...

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர்...