சுரேஷ் சலே அதிரடி: உண்ணாவிரதத்தை கைவிட்டார்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்த முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலி, தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் தனது

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளார்.உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து சுகவீனம் காரணமாகக் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சாலி, தற்போது அங்குள்ள இருதய சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவரைக் கைது செய்தது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 72 மணிநேரத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.தனது வழக்கு தொடர்பான விசாரணைகளை மேற்பார்வையிடும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்க வேண்டும் என்றும், தன்னை வேறொரு தடுப்பு நிலையத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, சுரேஷ் சாலி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார்.

போராட்டத்தின் போது அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், கடந்த ஜூன் 27 ஆம் திகதி அவர் திடீர் இருதய உபாதை காரணமாக அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சட்ட ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுக்கொண்டே, தனது உண்ணாவிரதத்தைக் கைவிட அவர் முடிவெடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தேசிய கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில்...

பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார். தனது 82 ஆவது வயதில் நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது...