மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 309,584ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,906 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 277,118 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 28,085 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 61 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 4,441 பேர் உயிரிழந்துள்ளனர்.