சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான அமைப்பின் வழக்கறிஞர்களினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய போர்க்குற்றங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை உடனடியாகக் கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குறித்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் 63 பக்கங்களைக் கொண்டதாக இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜெனீவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறியுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.