Date:

தனுஸ்க, நிரோஷன், குசலுக்கு பரிந்துரைக்கப்பட்ட தண்டனை

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு 2 வருடகால போட்டித்தடையும், நிரோசன் திக்வெல்லவுக்கு 18 மாதகால போட்டித்தடையும் விதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஒழுக்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன், குறித்த மூவருக்கும் 25,000 அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட வேண்டும் எனவும் 5 பேர் அடங்கிய விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, கட்டாய உயிர்குமிழி நடைமுறையை மீறிச் செயற்பட்டமைக்காக அவர்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங்களை நேற்று அவர்கள் மூவரும் கடிதங்கள் மூலம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஒழுக்காற்று குழுவிற்கு அறியப்படுத்தி இருந்தனர்.

இதனையடுத்து, இன்று அவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்புக்கு அமைய குறித்த மூன்று பேரும் ஒழுக்காற்றுக் குழுவில் முன்னிலையாகியிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...

ஜொலிக்கப் போகும் ராகம நகரம்..!

ராகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை...

அனுஷ பெல்பிட்ட கைது!

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும்...

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட...