Date:

அரசாங்கம் – எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு காணப்பட வேண்டும் – மைத்ரிபால சிறிசேன

தேசிய கொள்கைகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (28) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடொன்றை வளர்ச்சி பாதையில் இட்டு செல்வதற்காக, குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

நாட்டை நிர்வகித்த எந்த அரசாங்கங்களினாலும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கவில்லை.

வெளிநாட்டு உறவுகள், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்நுட்ப போன்ற விடயங்களுக்காக தேசிய கொள்கை வகுக்கப்படுவது போன்று அதற்கான இணக்கப்பாடுகளும் ஏற்படுத்தி கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை எந்தவொரு சக்தியாலும் அழிக்க முடியாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பணம் தருகிறீர்களா? இல்லையா? – சபையில் சஜித்

நாடாளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,...

நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம் – தசுன்

நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக...

பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற...

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைப்பு ( விலை பட்டியல் இணைப்பு)

இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான...