இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள இந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இந்ந தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று இடம்பெறவிருந்த இரண்டாவது ரி20 போட்டி நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.