மியன்மாருக்கு 6 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலையீட்டில் இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.
கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த இலங்கையில் கொள்வனவு செய்யப்பட்ட பைசர் தடுப்பூசி மருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் காலாவதியாகவுள்ளது இந்நிலையில் இவ்வாறானதொரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.