Date:

சிறுவர்களை பணி: கண்டறிய இன்று முதல் சுற்றிவளைப்பு

சிறுவர்களை அடிமைப்படுத்தி பணிகளில் அமர்த்தும் இடங்களைக் கண்டறிய மேல் மாகாணத்தில் இன்று (27) முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்து, இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சிறுவர்களை அடிமைப்படுத்தும் தனிநபர்கள் மற்றும் குழுவினர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

சட்ட ரீதியாக பாதுகாப்பு வழங்க வேண்டிய வயதெல்லைக்குட்பட்ட சிறுவர்களை, வீட்டு வேலைகள், கூலித் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் அமர்த்துவோர் தொடர்பில் 1929 எனும் அவசர தொலைபேசி மூலம் அழைத்து தெரியப்படுத்தலாம் என, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 6 மாதங்களில் 4,740 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...

‘டித்வா’ அனர்த்தம் | மாற்றுக் காணி வழங்கும் திட்டம்!

'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக்...