Date:

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – மஸ்கெலியாவில் போராட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், பெருந்தோட்ட கம்பனிகளின் நடவடிக்கைக்கு எதிராகவும் மஸ்கெலியாவில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மஸ்கெலியா எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமை தாங்கினார்.

” ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது எனக்கூறப்பட்டாலும் தொழிலாளர்களின் தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கான பெயருக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டியுள்ளது. அதேபோல பல தோட்டங்களில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. நலன்புரி சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான அடக்குமுறை செயற்பாடுகளை கம்பனிகள் கைவிட வேண்டும்.” – என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வரும் போர் சூழலை கருத்தில் கொண்டு,...

தெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்

தெஹ்ரானில் உள்ள ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்புடைய இலக்குகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத்...

உலகை அச்சுறுத்தும் தாக்குதல்: ஐ.நா. எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல், உலகின் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியத்தில் கட்டுப்படுத்த...

பாகிஸ்தானின், US தூதரகம் முற்றுகை ; பொலிஸாருடன் மோதல்

ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து பாகிஸ்தானின் கராச்சியில்...