Date:

கழிப்பறையில் இதை செய்திருப்பாரா? ரிஷாட்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடிர் சுகயினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவர் ஒரு தனி கழிப்பறையைப் பயன்படுத்தியுள்ள நிலையில், அவர் ஒவ்வொரு நாளும் அதைப் பயன்படுத்தச் சென்ற போது, ​​சிஐடி அதிகாரிகள் அவதானத்துடன் இருந்துள்ளனர்.

அதன்படி, அவர் இன்று கழிப்பறைக்குச் சென்று போது ரகசியமாக ஒரு துண்டு காகிதத்தை தனது உள்ளங்கையில் வைத்திருந்ததை சிஐடி அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

பின்னர் நாடாராளுமன்ற உறுப்பினர் கழிப்பறைக்குள் சென்று கையில் இருந்த காகிதத் துண்டை ஜன்னலுக்கு வெளியே எறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது அங்கு இருந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அதை எடுத்து பரிசோதித்த போது அதில் பல மாத்திரைகள் இருந்தமை தெரிய வந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தங்கியிருந்த 52 வது வார்டுக்குப் பொறுப்பான வைத்தியரிடம் மாத்திரைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரை முற்படுத்திய போது, அவருக்கு குடிக்கக் கொடுக்கப்பட்ட மாத்திரைகள் தூக்கி எறியப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரின் சிகிச்சையை நிறைவு செய்து மீண்டும் சிஐடிக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார்.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மரக்கறிகளின் விலை உயர்வு

புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மரக்கறிகளின் விநியோகம் இல்லாததால்,...

தூர இடங்களுக்கு பயணிப்போருக்கான அறிவிப்பு

பண்டிகை காலத்தில் வௌியூர் மற்றும் தூர இடங்களுக்கு பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன்...

சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் ...

பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்து வைத்து...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373