Date:

சிறுமி ஹிஷாலினி பாலியல் வன்கொடுமை உறுதி (VIDE0)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இன்று (19) தெரிவித்தார்.

VIDEO COURTESY  : TAMIL MIRROR

இதேவேளை, சிறுமியின் மரணம் குறித்து பல்வேறு தரப்பிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விசாரணை பிரிவு என்பன இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறுமியை டயகம பகுதியிலிருந்து கொழும்புக்கு  வீட்டு வேலைக்காக அழைத்து வந்த நபரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம்  ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோரிடம் நேற்று (18) மீண்டும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய டயகம பகுதியை சேரந்த சிறுமி, தீகாயங்களுடன் கடந்த 3ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள்...

506 BYD வாகனங்கள் விடுவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 506 BYD மின்சார வாகனங்கள் சுங்கத்...

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் இளைஞனைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம்

மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக...