பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அதிரடி கட்டளை ஒன்றை விதித்துள்ளார்.
வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில விற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீது, இன்றும் நாளையும் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை வழங்கினார்.