“ஐக்கிய தேசிய சுயத்தொழில் வியாபாரிகள் சங்கம்” தேசிய ரீதியில் கலைஞர்களுக்கான கலை அரண் தலைவராக முஹம்மட் நஸார் செயலாளராக கண்ணகி கலாலயம் உபதலைவர் சுரேஸ் சுரேஸ் கலைஞர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக பிரதீப்குமாரும் ஊடக சார்பான ஒருங்கிணைப்பாளராக முஹம்மட் நஸார்முஹம்மட் நஸார் விளையாட்டு துறைக்கான ஒருங்கிணைப்பு செயலாளராக கணேஷ்வரன் வாசகன் ஆகியோர் உத்தியோக பூர்வமாக நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.
கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் சுயத்தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கோடு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் ஐக்கிய தேசிய சுயத்தொழில் வியாபாரிகள் சங்கத்தின் நிறைவேற்றதிகாரம் கொண்ட தலைவரும் ஆகிய பிரத்திப் சால்ஸ் அவர்களிடம் சங்கத்தின் மறுசீரமைப்பின் பின் இன்று உத்தியோக பூர்வ நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.
புதிய தலைவர் செயலாளர் பிராந்திய அமைப்பாளர்கள் என பலரும் நேற்று நியமனம் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.
இதன் போது கருத்து தெரிவித்த அமைப்பின் செயலாளர் முஹம்மட் நஸார் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
“கலைஞர்களுக்கு முடிந்தளவு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இந்த பொறுப்பை எமது கண்ணகி கலாலயம் உறுப்பினர் ஐவர் பெற்றுக்கொண்டோம். விரைவில் எமது பணி பல்வேறு திட்டங்களுடன் ஆரம்பமாக உள்ளது. எம்மை நம்பி பலதரப்பட்ட பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் செயற்பாடுகள் என்ன என்பதை விரைவில் உங்களுக்கும் உணர்ந்து கொள்ள முடியும்.”