Date:

கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெருவில் கணவன் – மனைவி கைது

13 கோடி ரூபாய் பெறுமதியான 13 கிலோகிராம் ஹெரோயினுடன் கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெருவில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று(18) தெரிவித்தார்.

வீடொன்றின் சமயலறையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், வீட்டில் இருந்த கணவன் – மனைவி ஆகியோர் கைதுசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போது இந்தியாவில் இருக்கும் போதைப்பொருள் வர்த்தகர் ‘கிம்புலா எலே குணா’வின் சகோதரரான சுரேஷ் என்பவரும் அவரது மனைவியுமே கைதானவர்கள் என, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நேற்று (17) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஊடகப்பேச்சாளர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்! – கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச்...

ஜப்பானில் நிலநடுக்கம்..! | சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர்...

வானளவு உயரும் முட்டையின் விலை..!

நாடளாவிய ரீதியில் தற்போது முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட...

அனர்த்தங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை...