Date:

சிப்பிக​ளுடன் மூவர் வாழைச்சேனையில் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருணாகலுக்கு கனரக வாகனத்தில் சட்டவிரோதமாக 410 மூடை சிப்பியை  கடத்தி செல்ல முயன்ற  மூன்று பேரை இன்று சனிக்கிழமை  அதிகாலை கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு – திருகோணமலை பிரதான வீதிசந்தியான நாவலடிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 03.00 மணியளவில் வீதிச்சோதனை நடவடிக்கையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது வாழைச்சேனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கனரக  ரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் சட்டவிரோதமாக தலா 50 கிலோ கொண்ட 410 மூடை சிப்பிகளை குருணாகலுக்கு கடத்திச் செல்வதை கண்டறிந்தனர்.

இந்நிலையில், கடத்திச் சென்ற 3 பேரை கைது செய்ததுடன் சிப்பியுடன் கனரக வாகனத்தை மீட்டு வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...