Date:

அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் ஜோஸப் ஸ்டாலின்

தான் பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பின் 17 ஆவது உறுப்புரையுடன் சேர்த்து பார்க்கப்பட வேண்டிய 126 ஆவது உறுப்புரை பிரகாரம் அவர் நேற்று வெள்ளிக்கிழமை இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி ரவீனா டி சில்வா ஊடாக உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல்செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமை உரிமை மீறல் மனுவில் சிரேஷ்ட சட்டத்தரனி ருஷ்தி ஹபீப், ஜோசப் ஸ்டாலின் சார்பில் ஆஜராகவுள்ளார்.

தனக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட போதிலும் பொலிஸார் பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமையூடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பரிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறித்த மனுவூடாக கோரியுள்ளார்.

அத்துடன் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்ட கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பொலிஸ் ஊடகப் பிரிவினால் கடந்த 6 ஆம் திகதி வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை செல்லுபடியற்றது என உத்தரவிடுமாறும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதனை தவிர, ஜோசப் ஸ்டாலினுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன், மிரிஹான, வெலிக்கடை மற்றும் தலங்கம பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பத்தரமுல்ல சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 10 பேர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம்...

வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிக்கை

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். கண்டி மாவட்ட செயலாளரின் அதிகாரப்பூர்வ...

Breaking கண்டியில் பதற்றநிலை வெடிகுண்டு அச்சுறுத்தல்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை...

குஜராத்தில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று...