Date:

நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்

நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு ரோல்ஸ் ரொய்ஸ் (Rolls Royce) கார் ஒன்றை இறக்குமதி செய்தார்.

இந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அத்துடன், நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்த உயர்நீதிமன்றம், அபராத தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குமாறு உத்தரவிட்டது.

நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. வரி என்பது நன்கொடையல்ல நாட்டிற்கு குடிமகன்கள் செலுத்த வேண்டிய கட்டாய பங்களிப்பு.

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் புத்தளம்...

2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்தியாவின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறும் '2026 இருபதுக்கு 20...

உயர் தர பரீட்சை விடைத்தாள்கள் தொடர்பில் வெளிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள்...

கயந்த கருணாதிலக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல்...