15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மிஹிந்தளை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் இருதய விசேட வைத்திய நிபுணர் உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், கொழும்பு மேலதிக நீதவான் முன்பாக இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 15 வயது சிறுமியை விற்பனை செய்வதற்காக விளம்பரம் வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு இணையத்தளத்தின் உரிமையாளர் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.