கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் 350 கிலோகிராம் கொகேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீள் ஏற்றுமதிக்கான இரும்பு பொருட்கள் எனக் குறிப்பிட்டு போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து குறித்த கொகேய்ன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த கொகேய்னின் சந்தைப் பெறுமதி 6,000 மில்லியன் (600 கோடி) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பனாமாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்தே குறித்த கொகேய்ன் மீட்கப்பட்டதாகவும், குறித்த போதைப்பொருள் இந்தியாவுக்கு கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும் சுங்க தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த கொகேய்ன் போதைப்பொருள் தொடர்பில் இலங்கை சுங்கத்தின் விசேட விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.