பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன இன்று முற்பகல் போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார்.
சுகாதார வழிமுறைகளுக்கு அமைய பத்தரமுல்லையில் அவர் கடமைகளை பொறுப்பேற்றார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு மேலதிகமாக, போக்குவரத்து மற்றும் குற்றத் தடுப்புப்பிரிவை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன பொறுப்பேற்றுள்ளார்.