டெல்டா வகை கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வதும், முகக்கவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துளளது.
குறிப்பிட்ட காலத்துக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் அவ்வாறு இல்லையேல் மீண்டும் ஊரடங்கு தேவைப்படும் என அந்த ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது 85 நாடுகளில் பரவியுள்ளது.
இதுவரை மக்களிடையே பரவிய கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கொரோனாவே அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.