Date:

பொலிஸ் அதிகாரியின் கொலை சம்பவத்தின், பிரதான சந்தேகநபர் அடையாளம்

ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்ட தங்காலை – வித்தாரந்தெனிய பகுதி பொலிஸ் அதிகாரியின் கொலை சம்பவத்தின், பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அவர்களைக் கைதுசெய்வதற்காக, விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் இருந்த, 15 பேர் கொண்ட குழுவினர், பொலிஸ் அதிகாரியின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும், அவரது சகோதரரும் வீட்டில் வைத்து தாக்கப்பட்டனர்.

பின்னர், சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தரை அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்து சென்று தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளாரென விசாரணைகளில் வெளிவந்துள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த அவரது சகோதரர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

காசா தொடர்பில் இஸ்ரேல் எடுத்த தீர்மானம்; இலங்கையின் முடிவு இதோ

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை...

வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட...

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல...