Date:

கோட்டாபய மக்களை நரகத்துக்கு இழுத்துச் செல்கிறார்- ஹிருனிகா

தமது தந்தையின் கொலையில் குற்றவாளியான துமிந்த சில்வா விடுதலையானதைத் தொடர்ந்து தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர அச்சம் வெளியிட்டுள்ளார்.

தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதிக்கு கொண்டு வருவதற்காக தாமும் தமது குடும்பத்தினரும் நீண்ட சட்டப்போரில் ஈடுபட்டதாக பிரேமச்சந்திர சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.

தமது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதிக்கு கொண்டுவருவதற்காக நீண்ட சட்டப் போரை நடத்தப்பட்டது. இப்போது இலங்கையின் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் மக்கள் இப்போது நீதித்துறை முறையை எவ்வாறு நம்பலாம்? என்று ஹிருனிகா கேள்வி எழுப்பியுள்ளார். எனவே தமது பாதுகாப்பு குறித்து தாம் அச்சப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011 ல் நடந்த உள்ளூர் தேர்தலின் போது பாரத லட்சுமன் பிரேமச்சந்திர மற்றும் அவரது மூன்று ஆதரவாளர்களை சுட்டுக் கொன்றதாக சுமத்தப்பட்ட வழக்கில் துமிந்த சில்வா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

எனினும் சில்வாவுக்கு இந்த வாரம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில், மக்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள்.

இந்தநிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்களை நரகத்துக்கு இழுத்துச் செல்வதாக கூறி அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிசாட் பதியுதீன் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை..!

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த குண்டுத்...

யாழில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

தனது அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச...

சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பம்

சிறி தலதா வழிபாடு" இன்று முதல் ஆரம்பம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு...

பிள்ளையானின் சகா ஒருவர் சிஐடியில் சரணடைய ஆயத்தம்! – பாதுகாப்பு அமைச்சர் பரபரப்புத் தகவல்

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373