Date:

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது – இராஜாங்க அமைச்சர்

நாட்டில் அடுத்த வாரம் முதல் மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவதற்கு, கொரோனா கட்டுப்பட்டு நிலையம் பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக மாகாணங்களுக்கு இடையில் சில பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகள் இயங்கினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதிங்கட்கிழமை முதல் அந்த சேவைகளும் இடம்பெறாது என கூறினார்.

மேலும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடமிருந்து உறுதியான முடிவை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பதுளை பாடசாலைகளுக்கு பூட்டு!

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11...

இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே  பொத்துவிலில் இருந்து  236 கி.மீ....

’கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ உடைந்து சிதறும்’

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும் என்று டென்மார்க்...

கண்டியில் பதிவாகிய நிலநடுக்கம்!

கண்டி உடுதும்புர - தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05...