கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு வியாபார நிலையங்களில் இன்று (24) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக குறித்த இரண்டு வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாகியுள்ள நிலையில், தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
தீயிணை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.