ஜனாதிபதி இராஜாங்க அமைச்சரை பதவி விலக உத்தரவு!?

ராகம வைத்திய பீட மாணவர் தங்கும் விடுதிக்குள் அத்து மீறி நடத்தப்பட்ட தாக்குதலுடன், அருந்திக பெர்ணான்டோவின் சகாக்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் வாகனத்துடன் மாணவர்களால் பிடிக்கப்பட்டவர் அருந்திக பெர்ணான்டோவின் தனிப்பட்ட பணிக் குழுவின் உறுப்பினர் எனவும்...

மேலும் 19 கொவிட் மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் 19 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

இந்தியாவுடன் 500 மில்லியன் அமொிக்க டொலருக்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது!

எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இரண்டு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை இன்று (02) மாலை கைச்சாத்தானது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

க.பொ.த உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும்  விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 07...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 471 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 471 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 579,320 ஆக அதிகரித்துள்ளது.

ஹபாயா அணிந்து வந்த ஆசிரியை -கல்லூரி வளாகத்தில் அமைதியின்மை

திருகோணமலை ஷண்முஹா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து ஹபாயா அணிந்து சென்ற காரணமாக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பாத்திமா பஹ்மிதா அவர்கள் நீதிமன்றத்தில் இரு தரப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் காரணமாக இன்று மீண்டும் பாடசாலைக்கு...

கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துகளில் 2,473 பேர் பலி!

கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துகளில் 2,473 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,474 பேர் பலத்த காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த ஆண்டு 2,377 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன.

அனுரகுமார திஸாநாயக்க பயணித்த காரின் மீது முட்டைத் தாக்குதல்

கலகெடிஹேன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில் பங்கேற்க சென்ற அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பயணித்த காரின் மீது முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில்,...