2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று (16) இடம்பெறவுள்ளது.
அதன்படி, இன்று (16) முற்பகல் 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஏப்ரல் மாதம் கைதான அவர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு பிணை கோரி...
Molnupiravir என்ற வாய் மூலம் வழங்கப்படும் மருந்தை கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த அனுமதியை கொரோனா தொழில்நுட்ப குழு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சபுகஸ்ககந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்றிலிருந்து எதிர்வரும் 50 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடை ஏற்படாது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தாா்.
கொழும்பில் இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பில்...