Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமா?!

அரசாங்கத்துடன் இருந்துகொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மற்றும் அதன் தலைவரான மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரசாங்கத்தை வெளிப்படையாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்த இன்னும் இரண்டரை வருட காலம் மீதமுள்ளது. இப்படியான சூழ்நிலையில், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் தயாராகி வருகின்றன.

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் தற்கவைக்கும் தந்திரமாக அரசாங்கம் அரசியலமைப்பு முடிச்சை போட தயாராகி வருகிறது. இந்த விடயங்கள் காரணமாகவே அடுத்த தேர்தல் பொதுத் தேர்தலாக இருக்கலாம் என தான் நம்புவதாகவும்” மைத்திரிபால சிறிசேன குறிப்பிடடுள்ளார்.

அரசியலில் நீண்டகால நண்பர்களும் இல்லை நீண்டகால எதிரிகளும் இல்லை எனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கத்தில் இவர்கள் அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்து வருவதாக பேசப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், நாட்டில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசியல் கூட்டணி தனித்து அந்த தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373