Date:

ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் காலநிலையில் மாற்றம்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பாகங்களில், இந்தக் காலப்பகுதியில் ஓரளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதிய மழைவீழ்ச்சி இல்லாமையால், பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

நேற்றைய தினம் வரையில், ரன்தெம்பே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், 20.6 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 52 சதவீதம் வரையில் குறைவடைந்துள்ளது.

காசல்றீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 42.3 சதவீதம் வரையிலும், சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 36.9 சதவீதம் வரையிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறிருப்பினும், ரந்தனிகலை மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்மட்டத்தில் உள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் CIDயில் ஆஜராகின்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11)அன்று குற்றப் புலனாய்வுத்...

முகக் கவசங்களை அணியுங்கள்;பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய...

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373