செயலிழந்திருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பில் 100 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்தடைந்ததாக இலங்கை மின்சார சபை நேற்று (01) அறிவித்திருந்தது.
கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி முதல் செயலிழந்திருந்த குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேற்படி மின் பிறப்பாக்கி நேற்றைய தினம் மறுபடியும் செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.