Date:

2021 CMA Excellence வருடாந்த அறிக்கையிடல் விருது வழங்கும் நிகழ்வில் தங்கம் வென்றது நவலோகா மருத்துவமனை

இலங்கையின் முன்னோடி சுகாதார சேவை வழங்குநரான நவலோகா மருத்துவமனை 2022ஆம் ஆண்டை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தும் வகையில், 2021 CMA Excellence Combined Annual Reporting விருது வழங்கும் நிகழ்வில், ஹெல்த்கேர் பிரிவில் சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கைக்கான தங்க விருதை வென்றது. மேலும் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த அறிக்கையிடல் நடைமுறைக்கான மெரிட் விருதையும் வென்றது.

இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தினால் (CMA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக பட்டியலிடப்பட்டது மற்றும் பட்டியலிடப்படாத இலங்கை நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஒருங்கிணைந்த அறிக்கையிடலுக்கு வழிநடத்துவதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு பயனளிக்கும் நோக்கத்துடன் ஆகும்.

CMA Excellence ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருது வழங்கும் நிகழ்வில் இந்த விருதைப் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒருங்கிணைந்த நிதி அறிக்கையின் மிக உயர்ந்த தரங்களைக் கடைப்பிடிப்பதில் பல ஆண்டுகளாக நாங்கள் செய்த அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். எங்களின் அனைத்து பங்குதாரர்களுடனும் மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றைப் பேணுவதில், இந்த ஒருங்கிணைந்த அறிக்கை சுகாதார நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. COVID-19 தொற்றுநோய், நிதி மற்றும் நிதி அல்லாத சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தது. “சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயனுள்ள, உயர்மட்ட நிதி அறிக்கையிடல் நடைமுறைகளைப் பயன்படுத்தி இதுபோன்ற தனித்துவமான வருடாந்திர அறிக்கையை வழங்கியதற்காக எங்கள் குழுவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் அதைத் தொடர்ந்து செய்ய எதிர்பார்க்கிறேன். தகவலறிந்த நிதிநிலை அறிக்கைகளுடன் எதிர்வரும் ஆண்டிற்கான மதிப்பீடுகளை அமைப்பதற்கான எங்கள் முயற்சிகளைத் தொடர நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” என நவலோக மருத்துவமனையின் தலைவர் ஜயந்த தர்மதாச தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த அறிக்கைகள் டிசம்பர் 2013இல் வெளியிடப்பட்ட சர்வதேச கட்டமைப்பு வழிகாட்டுதல்களின் கீழ் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்த மதிப்பீடு கணக்கியல் மற்றும் நிதித் தகவல்கள் மட்டுமல்லாமல் இல் வழங்கப்பட்ட நிதி அல்லாத தகவல்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. நாற்பத்தொரு நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, சர்வதேச மற்றும் உள்ளூர் நடுவர் அடங்கிய ஒரு சிறந்த குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டன.

நவலோகா மருத்துவமனையானது சர்வதேச கட்டமைப்பு மற்றும் Global Reporting Initiative (GRI) அனுமதி பெற்ற ‘Core’ போன்ற உலகளாவிய வரையறைகளை அதன் கூட்டு ஆண்டறிக்கைக்கு தானாக முன்வந்து பின்பற்றுகிறது. இது ஒருங்கிணைந்த அறிக்கையிடல் கட்டமைப்பின் கீழ் ஆறு மூலதன அறிக்கையிடல் கட்டமைப்பைப் பின்பற்றுகிறது மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பெருநிறுவன தகவலைப் பகிர்வதன் மூலம் மதிப்பை உருவாக்குகிறது. கடந்த ஆண்டு CA ஸ்ரீலங்காவின் 56வது வருடாந்த அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் சிறந்த ஒருங்கிணைந்த நிதி அறிக்கையிடலுக்கான மிக உயர்ந்த தங்க விருதையும் மருத்துவமனை வலையமைப்பு வென்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373