Date:

அனைத்து மக்களும் சுகாதார வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்- ஹேமந்த ஹேரத்

கோவிட் தொற்றுநோய் வேகமாக பரவுவதை தடுக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் மாத்திரமே தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாட முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே பல நாடுகளில் பரவி உள்ளது, ஆனால் இலங்கையில் அது இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது.

எனவே இது பரவாமல் தடுக்க நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். மூன்று தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்களும் இன்று ஆபத்தில் உள்ளதால், அனைத்து மக்களும் சுகாதார வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசியின் மூன்று டோஸையும் பெற்ற ஒருவரால் கூட பழைய இயல்பு நிலைக்கு அல்ல புதிய இயல்பு நிலைக்கேனும் செல்ல முடியாத நிலைமை உள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் போதிலும் தற்போதே இதனை கொரோனா கொத்தணி என கூற முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...