Date:

பாகிஸ்தானையும் விட்டு வைக்காத இலங்கை

கடன் திட்ட அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிக்கிறது.

இதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது பாகிஸ்தானிய பயணத்தின்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இலங்கை அரச வர்த்தக் கூட்டுத்தாபம், விரைவில் வர்த்தக அமைச்சுக்கு உடன்படிக்கை வரைபு ஒன்றை சமர்ப்பிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த வருடத்துக்குள் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு சீமெந்து, பாஸ்மதி அரிசி என்பன இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கானுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, தற்போது பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பெறுமதியை 500 மில்லியன் டொலர்களில் இருந்து 2 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...