கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 961 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 608,065 ஆக அதிகரித்துள்ளது எனவும் இவர்களில் 15,365 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.






