Date:

தெஹிவளை மிருக்காட்சிசாலையிலுள்ள சிங்கத்துக்கு கொரோனா

தெஹிவளை மிருக்காட்சிசாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இதனையடுத்து சிங்கக்கூட்டுக்கு அருகில் பராமரிப்பாளர்களாக இருந்த மூவர் அவர்களின் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க,

” சிங்கமொன்று சுகயீனமுற்றிருப்பது உண்மைதான். மிருகங்களுக்கு நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனை முடிவு உரிய தகவலை தராத சூழ்நிலையும் காணப்படுகின்றது. எனவே ,இவ்விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மிருக்ககாட்சி சாலையின் பணிப்பாளர் குழுவுக்கு கட்டளையிட்டுள்ளேன்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம்...

வெல்லவாயவில் மற்றுமொரு கோர விபத்து

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று...

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

லான்சாவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம்...