“கொரோனா தொற்று போன்றே டெங்கு நோய்க்கான அறிகுறிகளும் காணப்படுவதால், அவ்வாறான நோய் அறிகுறிகள் தமது பிள்ளைகளுக்கு காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.பாடசாலையை விட பெற்றோரிடமிருந்து சிறுவர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது” என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை சுவாச நோய் வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பது மிக அத்தியாவசியமானது என்பதால் தமது பிள்ளைகளுக்கான பொறுப்புக்களை பெற்றோர்கள் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.செயலூக்கி தடுப்பூசி தொடர்பில் சமூகத்தில் உள்ள தவறான கருத்துகளை பொருட்படுத்தாமல் உடனடியாக செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் மேலும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.